சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சிலாபம் – பள்ளம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டு பொத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் சிறுவன் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.