நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 39,862 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12,189 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 51, 717 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 11,173 அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
மேலும்1,791 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 711 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 124 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.