சகல தரங்களுக்குமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அதிபர் ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேதன முரண்பாடு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இணைய வழிக் கற்பித்தல் முறைமையினை புறக்கணித்து அதிபர் ஆசிரியர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறாத நிலையில் அவர்கள் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலை செல்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
அவ்வாறு எதிர்வரும் 21ஆம் திகதி 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள முதலில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன .
தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளபோதிலும் அவர்களில் 10,000 ஆசிரியர் மாத்திரமே பாடசாலைக்கு சேவைக்கு சமூகம் அளிப்பார் என குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.