பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

0

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு மேலதிகமாக 7 ரூபாவை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தீர்மானத்தினை மில்கோ நிறுவனம் எடுத்துள்ளது.

அத்துடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் பால்மா உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply