துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

0

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சமப்வம் காலி மாவட்டம் ஹீனடிகல பொல்துவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் உனவட்டுன – தலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply