கூரிய ஆயுதத்தால் தனது இளைய சகோதரனை தாக்கிய நபர் அதிரடிக் கைது.

0

தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட களுதாவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலக்காகி படுகாயங்களுக்குட்பட்ட நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் களுதாவளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply