வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபருக்கு நேர்ந்த கதி.

0

யாழ் ஏழாலை பகுதியில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான 9060 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply