பரிதாபமாக உயிர் பிரிந்த 6 வயது சிறுமி.

0

சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு – பாசிக்குடா சுற்றுலா விடுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது .

இவ் அனர்த்தத்தின் போது கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த சியாம் செய்னப் (வயது-6) எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply