பொருட்களின் விலை குறித்த வர்த்தமானி இன்று வெளியாகும்!

0

அத்தியாவசிய பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசியபோதே அமைச்சர் இதனை கூறினார். குறித்த விவகாரம் தொடர்பில் அந்தந்த இறக்குமதியாளர்களுடன் இன்று கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்றார்.

சீமெந்து , எரிவாயு , கோதுமை மா மற்றும் பால்மா மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை உயர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் நேற்று மாலை எட்டியதுதாகவும் அவர் கூறினார்.

மேலும் சந்தையில் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காகவும், நுகர்வோர் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் அரசாங்கம் விலை உயர்வை அனுமதிக்கின்றதாகவும் இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

Leave a Reply