அதிரடியாக நீடிக்கப்படும் பயணத்தடை.

0

இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பெரும் தொற்று காரணமாக நாட்டில் தொடர்ந்து அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதி தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையானது தொடர்ந்தும் அமுலில் இருந்துவந்தது

இந்த நிலையில் மாகாணங்களுக்கு பயணத் தடையானது 15ஆம் திகதி நீக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) தலைமையில் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது இந்த பயணத்தடையை மேலும் நீடிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply