அமைச்சரவையில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

0

சில அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இந்த கலந்துரையாடலின் போது சீமெந்து, பால்மா மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் சீமெந்து, பால் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது இரண்டாவது முறை இதுவாகும் என்பதும் விசேட அம்சமாகும்.

Leave a Reply