கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்கள்!

0

திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, வலய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள அதிபர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

காலை 8:30 மணி தொடக்கம் 10.30 மணி வரை இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்குமாறு கோரி சுலோகங்களை ஏந்தி பிரதான வீதியில் வரிசையிலிருந்து அதிபர்களும் ஆசிரியர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள், அமைதியான முறையில், சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசம் அணிந்திருந்தனர்.

இன்றைய தினம் ஆசிரியர் தினமாக இருந்த போதிலும் இந்த போராட்டத்தை அரசாங்கத்து காண்பிக்க எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply