பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை…!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 3000 பாடசாலைகளையே தற்போது மீள் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி மொத்தம் 3000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வி அமைச்சருக்கும் சகல மாகாண ஆளுநர் களுக்கும் இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

இதன் போது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply