நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை – உதய கம்மன்பில

0

நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் தான் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நியூ போட்ரஸ் வலு நிறுவனம் 2023ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கே எரிவாயு விநியோக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

இந்த வருட இறுதியில் ஏலம் நடத்தப்பட்டால் அதிலிருந்து மூன்று வருடங்களில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

எவ்வாறெனினும் எமது நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply