தமிழகத்தில் அரச பேருந்தில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்து…!!

0

தமிழகத்தில் அரச பேருந்து ஒன்றில் திடீர் என தீப் பரவியுள்ளது.

இதற்கமைய கோயம்பேடு அருகே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தின் எஞ்சினில் இருந்து புகை எழும்பியது.

இதனைக் கண்ட வாகன சாரதி உடனடியாக வாகனத்தில் இருந்த பயணிகளை அரசு பேருந்தில் இருந்து இறங்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் அடுத்த ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இந்நிலையில் வாகன சாரதி பயணிகளை உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி அதன் காரணத்தால் அனைவரும் உயிர் தப்பினர்.

மேலும் குறித்த பேரூந்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply