3 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை!

0

கிண்ணியாவின் எல்லைப்புர பகுதிகளில் 3 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைப் புர சிறு கிராமங்களில் உள்ள நன்னி, ஈச்சந்தீவு, பூவரசன் தீவு காட்டுப்பகுதிகளில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் நேற்று (28) மாலை முற்றுகை யிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் வைத்திருந்தவர்கள் சுற்றி வலைப்பின் போது தப்பி ஓடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அக் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 12 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளில் 5 இலட்சம் பெறுமதியான 540 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிண்ணியாகாவற்துறை விஷேட புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலுக்கு அமைய கிண்ணியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹார் அவர்களின் தலைமையிலான குழு குறித்த சுற்றி வலைப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply