சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை வழங்க முடியாது…!!

0

சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன் அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply