அண்மையில் நாட்டில் ஏரி பொருளுக்கு தட்டுப்பாடு என நிலவியதாக குறிப்பிடப்பட்டது.
தற்போது குறித்த எரி பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் கொள்வதற்கு தேவையான அன்னிய செலவாணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்திருந்தார்.



