தே.மு.தி.க. சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி கொடுத்த விஜயகாந்த்! ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் ரஜனி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

0


மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தே.மு.தி.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-


கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும் வரலாறு காணாத கன மழையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது மனம் வேதனை ஏற்படுகிறது.

கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதியாக 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.


முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் கேரளா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்த மத்திய அரசு, பின்பு ஹெலிக்காப்டர் மூலம் நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த பின், கேரளா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன், மத்திய அரசின் நிதியாக இரண்டாம் கட்டமாக 500 கோடி ரூபாய் அறிவித்தார்.


கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகங்கள் சார்பில் கேரள மக்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் ரஜனி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு வெறும் ரூ.15 லட்சம் நிதியுதிவி செய்துள்ளார்.

Leave a Reply