மீண்டும் ஒரு அபிராமி – கள்ளக் காதலுக்காக குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

0

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனு என்பரும், உத்ராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு 2½ வயதில் ஏகலைவன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் உத்ரா, கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.

அப்போது உத்ராக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரெஜிஸ் என்ற இளைஞருக்கும் கள்ளக் காதல் உருவானது. இதையடுத்து அவர்கள் இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் குழந்தை ஏகலைவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமானதால் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கணவர் மனு, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால் உத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அவரும், கள்ளக்காதலனும் சேர்ந்து தரையில் வீசியும், சுவற்றில் அடித்தும் சித்ரவதை செய்தது தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட காயத்தால் குழந்தை இறந்து போனது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து உத்ராவும், அவரது கள்ளக்காதலன் ரெஜிசும் கைது செய்யப்பட்டனர்.Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply