திருகோணமலை மாவட்டத்திற்கு உரித்தான பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்.

0

சுற்றாடல் அமைச்சுடன் தொடர்புபட்ட திருகோணமலை மாவட்டத்திற்கு உரித்தான பிரச்சனைகள் மற்றும் உரிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இதன்போது மரக்கன்றுகளும் அமைச்சரால் நடப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அனைத்து வகையான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் சுற்றாடல் நேயமிக்க செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்டு வருகின்றது.

திருமலை மாவட்டத்தில் இயற்கை வளம் அதிகமாக காணப்படுகின்றது. எனவே குறித்த இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் பொறுப்புடையதாக காணப்படுகின்றது.

குறிப்பாக இயற்கை வளங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டும்.

Leave a Reply