விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை….!!

0

மச்ச அவதாரம்: தாயின் வயிற்றிலிருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி பிறப்பது…

கூர்ம அவதாரம்:
மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது…

வராக அவதாரம்:
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது…

நரசிம்ம அவதாரம்:
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது…

வாமண அவதாரம்:
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது…

பரசுராம அவதாரம்:
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது…

ராம அவதாரம்:
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது…

பலராம அவதாரம்:
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர் உலகோர்க்கு கடமையாற்றுவது…

கிருஷ்ண அவதாரம்:
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது…

கல்கி அவதாரம்:
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது

Leave a Reply