நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரிப்பு!

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,518 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 1,509 பேர் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர்.

இந்நிலையில் நாட்டில் இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 433,093 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply