சர்வதேச விமான நிலையத்தின் தாக்குதல் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல் போலியானது!

0

தாக்குதல் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல் தொடர்பில் பொதுமக்கள் பயம் கொள்ளவேண்டாம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினருக்கு கிடைத்த தகவல் போலியானது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பயம் கொள்ளவேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் பிரகாரம் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply