நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!

0

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் தினங்கள் தொடர்பிலும் தீர்மானிக்கப்படும்.

மேலும் நாடு பூராகவும் கொவிட் தொற்றின் தாக்கம் பன்மடங்காக அதிகரித்து வரும் நிலையில் கடந்த நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply