குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் எப்படி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்?…

0


கரு உருவாகி 37 வாரங்களுக்கு முன்பாக பிறக்கும் குழந்தைகளை குறைபிரசவக் குழந்தைகள் என்பார்கள். அப்படி குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளைவிட அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று முடிவினை வெளியிட்டிருக்கிறது.


இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நாம் ஐன்ஸ்டீனையே எடுத்துக்கொள்ளலாம். அவரும் குறை மாதத்தில் பிறந்த உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளுள் ஒருவர். 37 மாதங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகளைவிட, குறைமாதத்தில பிறக்கும் குழந்தைகளின் மூனை வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. அதனால் மிகச்சிறந்த அறிவாளிகளாகத் திகழ்கின்றனர்.


அதேபோல் சாதாரண குழந்தைகளை விட இயல்திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளில் கிட்டதட்ட 80 சதவீதம் பேர் திறமைசாலிகளாகவும் சமூகம் சார்ந்த சிந்தனையாளர்களாகவும் இருக்கிறார்கள்.


அதிக அளவிலான படைப்பாற்றல் கொண்டிருப்பார்கள். மன அளவில் மட்டமல்லாது உடலளவிலும் ஆரோக்கியமானவர்களாகவும் ஆற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதனால்தான் அதனால்தான் குறைமாதக் குழந்தைகள் ஸ்பெஷல் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர்.


அதேபோல் இயல்பாகவே தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றி நிறைய சிந்திப்பார்கள். நிறைய பேசுவார்கள்.


அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு செயலை சாதாரணமாக மற்றவர்கள் செய்ய எடுத்துக்கொள்ளும் காலம், வேகம், அதன் முடிவு அனைத்துமே குறைமாதக் குழநதைகள் செய்யும் போது அதிக படைப்புத்திறனுடன் அதிக உற்பத்தியும் குறைவான நேரத்தில் கிடைக்கும். – Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply