உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது!

0

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கமைய குறித்த தேர்தல் அடுத்த மாதம் 6,9 ஆம் திகதிகளில் கட்டம் கட்டங்களாக நடைபெறவுள்ளது.

அத்துடன் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் கமல்ஹாசன் “உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகின்றது 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே ” என தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply