சற்று முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடர் ஆரம்பம்!

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடர் இன்று இலங்கை நேரப்படி 2 மணியளவில் ஜெனீவாவில் ஆரம்பமானது.

இதற்கமைய முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முன்வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் 48ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

மேலும் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46 ஆவது கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இன்றைய தினமும் முன் வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply