இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற தெரிவுக் குழு!

0

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பு செய்வதற்கும், அந்த விடயம் தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்றைய தினம் கூடவுள்ளது.

இதற்கமைய சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

மேலும் குறித்த கட்சிகளுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் குறிப்பிட்டுளளார்.

Leave a Reply