தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறு சீரமைப்பு செய்வதன் நோக்கில் கூடிய நாடாளுமன்ற விசேட குழு!

0

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறு சீரமைப்பு செய்வதன் நோக்கில் நாடாளுமன்ற விசேட குழு நேற்றைய தினம் நாடாளமன்ற விசேட குழு கூடியது.

குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி, தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமையில் மாற்றம் தொடர்பிலான யோசனைகளை முன்வைத்திருந்தது.

அவ்வாறு மகாணசபை தேர்தல் முறைமையிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து அது தொடர்பான தீர்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவும் தெரிவுக் குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும் , அந்த விடயம் தொடர்பிலான திருத்தங்களை முன் வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply