வீரமாநகர் , தோப்பூர் என்னும் முகவரியில் வசித்து வந்த சந்திரன் ராதா எனும் 32 வயதுடைய கர்ப்பவதியொருவர் கொரோணாத் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வெளியில் சொல்லப் பயத்தில் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
நோயின் தாக்கம் அதிகரித்து சுயநினைவற்ற நிலையில் நேற்று முன்தினம் மூதூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதன Corona தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
திங்கட்கிழமை அதிகாலையில் சத்திரசிகிச்சையின் மூலமாக பிரசவம் நடைபெற்ற போதிலும் தாய் இறந்து விட்டார்.
குழந்தை நலமாக இருக்கின்றது.குறித்த தாய்க்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.
கொரோணாத் தொற்றுத் தொடர்பான விளக்கமின்மை மற்றும் உரிய நேரத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கத் தவறியமை போன்ற காரணிகளினால் மரணம் சம்பவித்திருக்கின்றது.