பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்!

0

நாட்டில் காணப்படும் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர் வரும் 9 மற்றும் 10ஆம் திகதி திறக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மொத்த வர்த்தகத்திற்காக மாத்திரம் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணத்தால் பொருளாதாரம் பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply