விநாயகர் சதுர்த்தியன்று ஒரு லட்சம் விநாயகர் சிலைகள்!

0

பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற 10ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை தங்களது வீடுகள் முன்பு வைத்து வழிபாடு நடத்துவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இது தனி மனித உரிமை என்பதுடன் இதனை தடுப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கின்றார்.

அத்துடன் மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்ட விடயம் தொடர்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதில் பாஜகவும் கலந்து கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply