இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா!

0

யாழ் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா நடைபெற்று வருகின்றநிலையில் இன்றைய தினம் தேர் உற்சவம் இடம்பெறுகிறது.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலையில் அடியவர்கள் ஒன்று கூடினால் அதிகம் தொற்று பரவல் காணப்படுவதன் காரணத்தினால் நல்லூர் ஆலய தேர் உற்சவதினை தரிசிக்க அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.

மேலும் ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி எவரும் உட்செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அத்ததுடன் பக்தர்களின் வருகையை தடுப்பதற்கு ஆலயத்திற்கு முன்பாக காவல்துறையினரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply