அரசாங்கத்தின் நோக்கம் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே- சஜித் பிரேமதாச!

0

சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்பதோடு நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை மூலம் மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டு அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையானது அவர்களின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான செயற்பாடாக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply