உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

0

இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் www.donet.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply