யாழ், அச்சுவேலி நாவற் காட்டு பகுதியில் இன்று பிற்பகல் பெய்த
இடியுடன் கூடிய மழையில் மின்னல் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் உடுப்பிட்டி யைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான தியாகராஜன் மதனபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



