இலகங்கை பொதுமக்கள் அனைவரும் பயம் கொள்ளத் தேவையில்லை!

0

நாட்டில் போதிய அளவு உணவு பொருட்கள் கையிருப்பிலுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பில் பயம் கொள்ளத் தேவையில்லை என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் உணவு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

எமது நாட்டுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி என்பன தேவையானளவு கையிருப்பில் உள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply