மிகவும் துரிதமான முறையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!

0

மிகவும் துரிதமான முறையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இரண்டு முறைகளின் கீழ் பகிர்ந்தளிக்க படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சதொச கிளை திறந்து வைத்ததன் மூலம் கொவிட் கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் சதொச நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply