வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிலர் தப்பியோட்டம்!

0

பயணத்தடை விதிக்கப்படுள்ள காலத்தில் கோப்பாய் திருநெல்வேலி பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபார நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வந்தனர்

தகவலறிந்து குறித்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

இந்நிலையில் அங்கு மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மரக்கறிகளை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கமைய இந்த இடத்தில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கு கோப்பாய் காவல் துறையினர் தடை விதித்திருந்த போதிலும் குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply