பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெற்றிக்டன் சீனி சந்தைக்கு!

0

இலங்கையில் சீனியின் விலை அதிகரித்து வரும் நிலையில் களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெற்றிக்டன் சீனியை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளாதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சீனி தொகையை கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply