கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவால் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் எரிவாயுவின் விலை திடீரென 25 ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அத்துடன் 15 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் 25 ரூபா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே ஒரு சிலிண்டர் விலை 875.50 ரூபாவாக இருந்தது.
இன்று மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் 900.50 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபா 75 அதிகரித்து 1831.50 க்கு விற்கப்படுகின்றன.
குறித்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.