இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இதற்கமைய குறித்த தீர்மானம் மேலும்சில காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான அழைப்பானை அனுப்புவது அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கு விசாரணைகள் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வழக்குகளில் உரிய நீதிபதியின் அனுமதியின்றி நீதிமன்ற அறைக்குள் நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் நீதி மன்றத்திற்குள் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.