இலங்கையில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையில் பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் , மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply