தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த நல்லூர் முருகப்பெருமான்!

0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் திருக்கார்த்திகை திருவிழா நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நல்லூர் முத்துக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து இருந்தார்.

மேலும் 17ம் திருவிழாவான நேற்றைய தினம் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு அழகிய அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply