தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 2ம் டோஸ் தடுப்பு மருந்து ஏற்றும் பணி!

0

கொவிட்19 இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்றும் இடம் பெற்று வருகின்றது.

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சைனோபாம் தடுப்பு மருந்து ஏற்றும் பணி இடம் பெற்றது.

30 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்காக இத் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக வழங்கப்படுகிறது.

தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் மக்கள் இத் தடுப்பூசியினை பெற ஆர்வமாக முந்தியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தே தடுப்பூசியினை பெறுகின்றனர்.

இத் தடுப்பூசியினை இலவசமாக அரசாங்கம் வழங்கியமையிட்டு அரசாங்கத்துக்கு மக்கள் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply