இலங்கையில் இன்று முதல் வெப்பநிலையில் உயர்வு!

0

நாட்டில் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்கு களுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதற்கமைய சூரியன் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணத்தால் குறித்த செயற்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் கல்முனை, சூரன் பற்று, கரண்டை, உடையார் துறை, சங்கு பிட்டி போன்ற பகுதிகளை இணைக்கும் அகல கோட்டின் வழியாக பகல் 12. 11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலையிலும் உயர்வு காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply