இலங்கையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 கிலோ மீட்டருக்கும் அதிகமான பணத்தை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும்.

அத்துடன் நாட்டின் சில பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

பொதுமக்கள் அனைவரும் இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அறிவுறுத்தப்படுகின்றனர்

Leave a Reply