இலங்கையில் தற்போது சீனியின் விலை அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் அதன் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
சந்தையில் தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் சீனியின் விலையை குறைக்க முடியாது என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தேவையான சீனி மாத்திரமே தமது கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அடுத்து வரும் மூன்று வாரங்கள் சீனியின் விலையை 190ரூபா,180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.



