இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான இறுதி முடிவு!

0

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் 19 பரவல் தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் குறித்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுல்ப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை குறித்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply